/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தேசிய நெடுஞ்சாலையில் 'ரம்பிள் ஸ்டிரிப்' அமைப்பு அணிவகுத்த வாகனங்களால் போக்குவரத்து பாதிப்புதேசிய நெடுஞ்சாலையில் 'ரம்பிள் ஸ்டிரிப்' அமைப்பு அணிவகுத்த வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் 'ரம்பிள் ஸ்டிரிப்' அமைப்பு அணிவகுத்த வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் 'ரம்பிள் ஸ்டிரிப்' அமைப்பு அணிவகுத்த வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் 'ரம்பிள் ஸ்டிரிப்' அமைப்பு அணிவகுத்த வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 25, 2024 02:15 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வழியாக பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில், தமிழக எல்லையிலுள்ள ஜூஜூவாடி, இ.எஸ்.ஐ., மருத்துவமனை சந்திப்பு, தர்கா, சீத்தாராம்மேடு உட்பட பல்வேறு இடங்களில், மக்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். இதனால் விபத்து ஏற்படுகிறது. மக்கள் சாலையை கடக்கும் இப்பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம், வாகன ஓட்டிகளை எச்சரிக்க, ஓசூர் ஜூஜூவாடி, இ.எஸ்.ஐ., மருத்துவமனை சந்திப்பு, தர்கா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக 'ரம்பிள் ஸ்டிரிப்' அமைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று சீத்தாராம்மேடு பகுதியிலுள்ள பயணிகள் நடை மேம்பாலம் கீழ், 'ரம்பிள் ஸ்டிரிப்' அமைத்தது. அதனால், பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை முதல், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மேம்பாலம், ராயக்கோட்டை சாலை சந்திப்பு மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அதனால், தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாகலுார் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மதியத்திற்கு பின் போக்குவரத்து பாதிப்பு குறைந்தது.