ADDED : ஜூலை 16, 2024 01:57 AM
கிருஷ்ணகிரி: முகரம் பண்டிகையையொட்டி நேற்று மாலை, 4:00 மணிக்கு, கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவியில், இஸ்லாமியர்கள் தங்கள் உடம்பில் கத்தி, பிளேடு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் கீறி-யபடியும், அடித்துக் கொண்டும் ரத்தம் சொட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
இதில், 500க்கும் மேற்பட்ட-வர்கள் கருப்பு சட்டையுடன் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்-தினர். இரவு, 10:00 மணிக்கு இஸ்லாமியர்கள் தீமிதித்து, துக்க நாளை அனுசரித்தனர்.