Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/51 அடியை எட்டும் கே.ஆர்.பி., அணை

51 அடியை எட்டும் கே.ஆர்.பி., அணை

51 அடியை எட்டும் கே.ஆர்.பி., அணை

51 அடியை எட்டும் கே.ஆர்.பி., அணை

ADDED : ஜூலை 26, 2024 03:37 AM


Google News
கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் இன்று, 51 அடியை எட்ட உள்-ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2 மாதங்களாக அவ்வப்-போது லேசான மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்-வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 44.28 அடியில், 42.31 அடியாக உயர்ந்தது. இதனால் அணையிலிருந்து கடந்த, 4 முதல், 22 நாட்களாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், 159 நாட்களுக்கு பிறகு கடந்த, 15ல் கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 50 அடியை எட்டியது.

நேற்று அணைக்கு வினாடிக்கு, 248 கன அடி நீர்வரத்து இருந்-தது. அணையிலிருந்து இடது மற்றும் வலது புற வாய்க்கால் மூலம், 185 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று காலை, 50.95 அடியாக உயர்ந்துள்ளது. கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்-பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 300 கன அடி நீர் வந்து கொண்-டிருப்பதாலும், மாவட்டத்தில் பரவலாக மழையாலும் இன்று (ஜூலை 26) கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 51 அடியை எட்ட உள்ளது. அதன்பிறகு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட உள்ளது. அணைக்கு நீர்வ-ரத்து மேலும் அதிகரித்தால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என, பொதுப்பணித்துறை அதிகா-ரிகள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us