/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பாலம் வேலை நடப்பது தெரியாததால் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் விபத்து பாலம் வேலை நடப்பது தெரியாததால் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் விபத்து
பாலம் வேலை நடப்பது தெரியாததால் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் விபத்து
பாலம் வேலை நடப்பது தெரியாததால் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் விபத்து
பாலம் வேலை நடப்பது தெரியாததால் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் விபத்து
ADDED : ஜூன் 01, 2024 02:12 AM
ஓசூர்;கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் நடுவே பள்ளம் தோண்டி உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. வாகனங்கள் செல்ல, அதன் அருகே சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பாலம் வேலை நடப்பது தெரிவதில்லை. இதனால் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன.
குஜராத்தில் இருந்து, சேலம் மாவட்டத்தில் இயங்கும் தனியார் ஆடை நிறுவனத்திற்கு, இயந்திர சாதனங்களை ஏற்றி வந்த லாரி கடந்த, 26ல் விபத்தில் சிக்கியது. டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார். அதேபோல், நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஈச்சர் லாரி, பாலம் வேலை நடப்பது தெரியாமல் நேராக சென்றதால், அங்கு சாலையில் இருந்த மண் மேட்டில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ேஷாரோப் யாதவ், 20, காயமடைந்தார். எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அலட்சியம் காட்டாமல், கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், கூடுதல் எச்சரிக்கை பலகைகள், மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.