Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஒரே செடியில் பூத்த 80 பிரம்ம கமலம் பூக்கள்

ஒரே செடியில் பூத்த 80 பிரம்ம கமலம் பூக்கள்

ஒரே செடியில் பூத்த 80 பிரம்ம கமலம் பூக்கள்

ஒரே செடியில் பூத்த 80 பிரம்ம கமலம் பூக்கள்

ADDED : ஜூலை 26, 2024 10:49 PM


Google News
ஓசூர்:ஒரே செடியில் பூத்த, 80 பிரம்ம கமலம் பூக்களை பொதுமக்கள் ரசித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே காரப்பள்ளியைச் சேர்ந்தவர் இளையராஜா, 40. இவரது குடும்பத்தினர் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும், பிரம்ம கமலம் செடியை, வீட்டில் வளர்த்து வருகின்றனர்.

இவர்களது வீட்டில் உள்ள பிரம்ம கமலம் செடி, ஆண்டுக்கு இருமுறை பூத்து வருவதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இளையராஜா வீட்டில் இருந்த பிரம்ம கமலம் செடியில் ஒரே நேரத்தில், 80 பூக்கள் பூத்துக் குலுங்கின.

இதையறிந்த காரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மக்கள் பலர், இளையராஜா வீட்டிற்கு வந்து, பிரம்ம கமலம் பூக்களை ஆச்சர்யமாக பார்த்து ரசித்தனர். அவரது குடும்பத்தினர், அப்பூக்களை சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us