Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் ஏ.டி.எம்.,மில் கொள்ளை கும்பலை பிடிக்க 10 தனிப்படை

ஓசூர் ஏ.டி.எம்.,மில் கொள்ளை கும்பலை பிடிக்க 10 தனிப்படை

ஓசூர் ஏ.டி.எம்.,மில் கொள்ளை கும்பலை பிடிக்க 10 தனிப்படை

ஓசூர் ஏ.டி.எம்.,மில் கொள்ளை கும்பலை பிடிக்க 10 தனிப்படை

ADDED : ஜூலை 08, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், பாகலுார் சாலையில் ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லாத நிலையில், நேற்று அதிகாலை, காஸ் வெல்டிங் செய்து, இயந்திரத்தை உடைத்து, 14.50 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பினர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணையை துவங்கிய நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லந்துார் மற்றும் ஹாசன் பகுதிகளில், இரு ஏ.டி.எம்., மையங்களில், 20 லட்சம் ரூபாய்; ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தில், இரு பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,மில், 25 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

'ஐந்து கொள்ளை சம்பவங்களிலும் கிடைத்த கைரேகை ஒன்றாக உள்ளது. இதனால் ஒரே கும்பல் கைவரிசை காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. வடமாநில கும்பலாக இருக்கலாம்' என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்நிலையில், சேலம் டி.ஐ.ஜி., உமா, ஓசூரில் கொள்ளை நடந்த ஏ.டி.எம்., மையத்தை நேற்று மாலை ஆய்வு செய்தார்.

பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''ஏ.டி.எம்.,மில் கைவரிசை காட்டிய கும்பலை பிடிக்க, 40 போலீசார் கொண்ட, 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் ஓசூரில் நடந்த மூன்று ஏ.டி.எம்., கொள்ளை சம்பவங்களும் ஒரே மாதிரி நடந்துள்ளன,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us