ADDED : மார் 23, 2025 01:04 AM
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
ஊத்தங்கரை:ஊத்தங்கரையை அடுத்த, கருவானுார் அரசு நடுநிலைப்பள்ளியில், விழா மேடை திறப்பு விழா, புரவலர் பெயர் பலகை திறப்பு விழா, பள்ளியின், 55ம் ஆண்டு விழா என, முப்பெரும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர்மக்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன், ஒரு லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட விழா மேடை திறக்கப்பட்டது. ஆண்டுவிழாவையொட்டி நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்
களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், மத்துார் வட்டாரக் கல்வி அலுவலர் ராமத்துல்லா, ஊத்தங்கரை கம்பன் கழக அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி உமா, தலைவர் தேவன், துணைத்
தலைவர் மாரியப்பன், பள்ளி மேலாண்மை குழு சரிதா, அஞ்சலாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.