Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைது

உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைது

உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைது

உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைது

ADDED : ஜூலை 15, 2024 12:57 AM


Google News
கரூர்: தென்னிலை அருகே, உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி, பீடா கடையில் பணம் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்-தனர்.கரூர் மாவட்டம், தென்னிலை அருகே கார்வழி சீலநாயக்கன்-பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 65.

அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த, 11ல் ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த நவீன் குமார், 29, என்பவர், தன்னை உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி, பால-சுப்பிரமணியத்தின் மளிகை கடையில் சோதனை செய்துள்ளார். அப்போது, கடையில் இருந்த, 52,000 ரூபாயை நவீன் குமார் திரு-டிக்கொண்டு சென்று விட்டார்.இதுகுறித்து, மளிகை கடை உரிமையாளர் பாலசுப்பிரமணி கொடுத்த புகார்படி, தென்னிலை போலீசார் நேற்று, நவீன் குமாரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us