Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி

ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி

ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி

ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : ஜூலை 31, 2024 12:04 AM


Google News
கரூர்: க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையம் அணைக்கு, பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் வரத்து தொடர்வதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார் வாழி ஆத்துப்பா-ளையம் என்ற இடத்தில், அணை கட்டப்பட்டுள்ளது.

நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் கழிவு நீர் மூலம், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல, பிர-தான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 2019ல் மழை காரணமாக, 18 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் முழு கொள்ளளவான, 26.9 அடியை தண்ணீர் எட்டி-யது. இதனால், அணையில் இருந்து நொய்யல் வாய்க்கால் பகு-தியில் உள்ள, 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆத்துப்பாளையம் அணையில் இருந்து, நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஆத்துப்பா-ளையம் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து, பிர-தான கால்வாய் மூலம் தொடங்கியுள்ளது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 95 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 16.36 அடியாக இருந்-தது.தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பாசன தேவைக்காக நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என, விவசா-யிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us