Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நாளை பென்சனர் குறைதீர் கூட்டம்

நாளை பென்சனர் குறைதீர் கூட்டம்

நாளை பென்சனர் குறைதீர் கூட்டம்

நாளை பென்சனர் குறைதீர் கூட்டம்

ADDED : ஜூன் 26, 2025 01:45 AM


Google News
கரூர், திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் நாளை (27 ல்) கரூர் அருகே நடக் கிறது.

இதுகுறித்து, திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர் மாதவ சங்கர் வெளியிட்ட அறிக்கை:

பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் நாளை (27 ல்) காலை, 9:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை, கரூர் அருகே கருப்பம்பாளையம் புதுநகர் ஏசியன் பேப்ரிக்ஸ் நிறுவனத்தில் நடக்கிறது. அதில், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு குறைகளை, உரிய ஆவணங்களுடன் தெரிவித்து, தீர்வு பெறலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us