ரூ.5.57 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ரூ.5.57 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ரூ.5.57 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ADDED : ஜூன் 13, 2024 06:53 AM
கரூர் : கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை ஏலம் நடைபெறும்.
கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கு, ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த வாரம் நிலக்கடலை ஏலம் நடந்தது.
சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 203 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 66.62 ரூபாய், அதிகபட்சமாக, 81.56 ரூபாய், சராசரியாக, 78.32 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 7,245 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 5 லட்சத்து, 57 ஆயிரத்து, 40 ரூபாய்க்கு விற்பனையானது.