Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/சாலையோரத்தில் வீசப்பட்ட ஆண் சிசுவை மீட்ட மக்கள்

சாலையோரத்தில் வீசப்பட்ட ஆண் சிசுவை மீட்ட மக்கள்

சாலையோரத்தில் வீசப்பட்ட ஆண் சிசுவை மீட்ட மக்கள்

சாலையோரத்தில் வீசப்பட்ட ஆண் சிசுவை மீட்ட மக்கள்

ADDED : ஜூன் 13, 2024 06:52 AM


Google News
குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த உப்புகாட்சிபட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் சாலை ஓரத்தில் பிறந்த, 30 நிமிடமேயான ஆண் சிசுவின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. அவ்வழியாக சென்றவர்கள், சிசுவை மீட்டு, காவல்காரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பணியில் இருந்த மருத்துவர் முதலுதவி அளித்து, பின் மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட சுகாதார பணி இணை இயக்குனர் சந்தோஷ் குமார் கூறுகையில்,'' காவல்காரன்பட்டி அருகிலுள்ள கிராமத்தில் பிறந்து, 30 நிமிடமேயான ஆண் சிசு கிடந்ததை பார்த்த பொதுமக்கள் மீட்டு, இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று காவல்காரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை. தோகைமலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us