Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புதிய ரவுண்டானாவில் மின் விளக்குகள் தேவை

புதிய ரவுண்டானாவில் மின் விளக்குகள் தேவை

புதிய ரவுண்டானாவில் மின் விளக்குகள் தேவை

புதிய ரவுண்டானாவில் மின் விளக்குகள் தேவை

ADDED : செப் 23, 2025 01:18 AM


Google News
கரூர், கரூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள, இரண்டு ரவுண்டானாவில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

வெங்ககல்பட்டி, வெள்ளியணை வழியாக, பாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, நாள்தோறும் பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால், வெங்ககல்பட்டி மற்றும் வெள்ளியணை சாலையில், சில மாதங்களுக்கு முன், விபத்துகளை தவிர்க்கும் வகையில், ரவுண்டானா அமைக்கப்பட்டது. மேலும், அந்த சாலையில், விவசாய நிலங்கள், ஏராளமான வீடுகள் உள்ளன.

இந்நிலையில், இரண்டு ரவுண்டானாவிலும் மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.

எனவே, வெள்ளியணை சாலை மற்றும் வெங்ககல்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில், மின் விளக்குகள் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us