/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர்-சேலம் சாலையில் குடிக்க தண்ணீரின்றி ஓட்டுனர்கள் தவிப்பு கரூர்-சேலம் சாலையில் குடிக்க தண்ணீரின்றி ஓட்டுனர்கள் தவிப்பு
கரூர்-சேலம் சாலையில் குடிக்க தண்ணீரின்றி ஓட்டுனர்கள் தவிப்பு
கரூர்-சேலம் சாலையில் குடிக்க தண்ணீரின்றி ஓட்டுனர்கள் தவிப்பு
கரூர்-சேலம் சாலையில் குடிக்க தண்ணீரின்றி ஓட்டுனர்கள் தவிப்பு
ADDED : செப் 19, 2025 01:37 AM
கரூர், திருச்சி, மதுரை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சின்டெக்ஸ் தொட்டிகள் அகற்றப்பட்டு விட்டதால், தண்ணீர் இல்லாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூர் நகரை சுற்றி, திருச்சி, மதுரை, சேலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதன் வழியாக செல்லும் பொதுமக்களின் குடிநீர் வச-திக்காக, அந்தந்த பஞ்., சார்பில் சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டிருந்தன. அதில், நாள்தோறும் தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. தேசிய நெடுஞ்சாலையில் டூவீலர், கார், லாரி ஓட்டி செல்லும் வாகன ஓட்டிகள், சின்டெக்ஸ் தொட்டியில் உள்ள நீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர்.
நாளடைவில் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்காமல் கிடப்பில் போட்டனர். இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரும்-பாலான தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் தொட்டியே இல்லை. இதனால் தண்ணீரின்றி வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளாகின்றனர்.
எனவே, புதிய சின்டெக்ஸ் தொட்டியை வைத்து, நாள்தோறும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.