Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் அருகே குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

கரூர் அருகே குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

கரூர் அருகே குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

கரூர் அருகே குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

ADDED : ஜூலை 13, 2024 08:17 AM


Google News
கரூர்: கரூர் அருகே, சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர்-கோவை சாலை எம்.ஜி.எம்., பெரிய ஆண்டாங்கோவில் சாலையில் கோவில்கள் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன.

அந்த வழியாக, 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாக-னங்கள் சென்று வருகின்றன. அமராவதி ஆற்றில் கட்டப்பட்-டுள்ள தடுப்பணைக்கும், சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இந்நிலையில், எம்.ஜி.எம்., பெரிய ஆண்டாங்கோவில் சாலை, பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். குண்டும், குழியுமாக உள்ள சாலையை, சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us