Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

ADDED : ஜூலை 13, 2024 08:10 AM


Google News
கரூர்: கரூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, குடும்ப நல செயலகம் சார்பில், உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்-தது.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்பு-ணர்வு பேரணியை, கலெக்டர் தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் மக்கள் தொகை கட்டுபடுத்துவதன் அவசியம் குறித்த, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கொண்டு சென்றனர். நிறைவாக, பேரணி கரூர் அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் நிறைவு பெற்-றது. பேரணியில் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் ராஜா, மருத்-துவ பணிகள் இணை இயக்குனர் சுதர்சனா ஜேசுதாஸ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் சுபிலா உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us