/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பகவதி அம்மன் கோவில் திருவிழா இருதரப்பு கருத்து வேறுபாடால் ரத்து பகவதி அம்மன் கோவில் திருவிழா இருதரப்பு கருத்து வேறுபாடால் ரத்து
பகவதி அம்மன் கோவில் திருவிழா இருதரப்பு கருத்து வேறுபாடால் ரத்து
பகவதி அம்மன் கோவில் திருவிழா இருதரப்பு கருத்து வேறுபாடால் ரத்து
பகவதி அம்மன் கோவில் திருவிழா இருதரப்பு கருத்து வேறுபாடால் ரத்து
ADDED : ஜூன் 09, 2025 04:25 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த பொருந்தலுார் பஞ்., தெலுங்கபட்டி கிரா-மத்தில் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோ-விலை ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் பராமரித்து வந்தனர். பகவதி அம்மனுக்கு, பக்தர்கள் காணிக்கையாக தங்க நகைகளை அணிவித்து வந்தனர்.
அந்த நகைகளை அதே பகுதியை சேர்ந்த ஒரு நபர் பாதுகாத்து திருவிழா அன்று கொண்டு வந்து வழங்கு-வது வழக்கமாக இருந்தது. கடந்தாண்டு திருவிழாவின் போது, ஆபரண பெட்டியை தனிநபர் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஆபரண பெட்டியை சப்பரத்தில் வைத்து எடுத்து வந்துள்ளனர். கடந்தாண்டு திருவிழா சிறப்பாக நடந்தது. ஆனால், தற்போது திருவிழா தொடங்குவதற்கு முன்பே, ஒரே சமூகத்தினர் இரு பிரிவாக பிரிந்து திருவிழா நடத்த இடையூறு ஏற்படுத்தி வந்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம் திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தலை-மையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஒரு தரப்-பினர், ஆபரண பெட்டியை தனிநபர் கொண்டுவர எதிர்ப்பு தெரி-வித்து வெளிநடப்பு செய்தனர். இதனால், ஆபரண பெட்டியை பொதுவாக எடுத்து வந்து திருவிழா நடத்துவது என முடிவு செய்-யப்பட்டது.
இந்நிலையில், மூன்று நாள் திருவிழாவில், முதல் நாளான, நேற்று காலை, ஆபரண பெட்டியை வைத்துள்ள நாட்டாமை என்ற நபர், சாவியை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் மற்-றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினர் கருத்து வேறுபாடால், சட்ட ஒழுங்கு பாதிக்கப்-படும் என்பதால், திருவிழா ரத்து செய்யப்படுவதாக ஹிந்து அறநி-லையத்துறையினர் அறிவித்தனர். அசம்பாவிதத்தை தவிர்க்க, குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.