Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலை பஸ் ஸ்டாண்டில் வியாபாரிகள் புலம்பல்

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் வியாபாரிகள் புலம்பல்

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் வியாபாரிகள் புலம்பல்

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் வியாபாரிகள் புலம்பல்

ADDED : ஜூன் 09, 2025 04:26 AM


Google News
குளித்தலை: குளித்தலை தற்காலிக பஸ் ஸ்டாண்ட், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

இதில், ஏற்கனவே நக-ராட்சி சார்பில், 19 கடைக்காரர்கள் தொடர்ந்து கடை நடத்தி வரு-கின்றனர். இந்தாண்டு புதிதாக, 13 கடைகள் ஏலம் விடப்-பட்டன. இதை தொடர்ந்து குளித்தலை நகராட்சி பஸ் ஸ்டாண்டில், 32 கடைகள் ஏலம் விடப்பட்டு, வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இந்த பஸ் ஸ்டாண்டில் உள்ளே தரைக்கடை வியா-பாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், கனரக வாகன வியாபா-ரிகள் உள்ளிட்டோர் உள்ளே சென்று தங்களின் வியாபாரத்தை செய்து வருவதால் ஏலம் எடுத்த கடைக்காரர்கள் பாதிக்கப்படுவ-தாக வேதனை தெரிவிக்கின்றனர். ஏலம் எடுக்காமல், வெளியில் இருந்து வந்து வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்து-விட்டு செல்வதால், தங்களால் நகராட்சிக்கு வாடகை கூட செலுத்த முடியாத நிலை உள்ளதாக ஏலம் எடுத்து கடை நடத்தி வரும் வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.

இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us