ADDED : ஜூன் 07, 2025 01:24 AM
கரூர், கவுண்டம்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளியில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.
அதில் பள்ளியில், 2024-25 கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற உமித்ரா, கோகுல் ஆகியோருக்கு, பள்ளி தலைமையாசிரியர் சிவகாமி பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவில், உதவி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர் செந்தில் குமார், பி.டி.ஏ., நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.