/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மனைவி, குழந்தைகள் மாயம்: போலீசில் கணவன் புகார் மனைவி, குழந்தைகள் மாயம்: போலீசில் கணவன் புகார்
மனைவி, குழந்தைகள் மாயம்: போலீசில் கணவன் புகார்
மனைவி, குழந்தைகள் மாயம்: போலீசில் கணவன் புகார்
மனைவி, குழந்தைகள் மாயம்: போலீசில் கணவன் புகார்
ADDED : ஜூன் 11, 2024 06:51 AM
கரூர் : கரூர் மாவட்டம், மண்மங்கலம் மேத்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றி வேல், 28; இவருக்கு ரஞ்சினி, 25; என்ற மனைவியும், வர்ஷினி, 7, என்ற மகளும், சமித், 2, என்ற மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி, எட்டு ஆண்டு ஆகிறது.
இந்நிலையில் கடந்த, 8ல் குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தைகளுடன், வீட்டில் இருந்து வெளியே சென்ற ரஞ்சினி, திரும்பி வரவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், ரஞ்சினி குழந்தைகளுடன் செல்லவில்லை. அதிர்ச்சியடைந்த வெற்றி வேல் போலீசில் புகார் செய்துள்ளார்.
வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.