Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 பேர் 'போக்சோ'வில் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 பேர் 'போக்சோ'வில் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 பேர் 'போக்சோ'வில் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 பேர் 'போக்சோ'வில் கைது

ADDED : ஜூலை 03, 2024 03:07 AM


Google News
கரூர்;கரூர் அருகே, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, இரண்டு பேரை மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் செல்ல பாண்டியன், 45; ஓட்டல் தொழிலாளி.

ராமநாதபுரம் மாவட்டம், கீழபழனியூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் குமார், 30; டிரைவர். இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த சகோதரிகளான, 14, 13 வயதுடைய சிறுமிகளுக்கு, செல்லபாண்டியன், பிரதீப்குமார் ஆகியோர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.இதுகுறித்து, சிறுமிகளின் தாய் கொடுத்த புகாரின்படி, கரூர் மகளிர் போலீசார் செல்ல பாண்டியன், பிரதீப் குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us