ADDED : ஜூலை 14, 2024 03:22 AM
குளித்தலை: நங்கவரம் டவுன் பஞ்., கோவிந்தனுார் உய்யகொண்டான் வடிகால் வாய்க்கால் அருகே, குப்பை கொட்டும் இடத்தில், பிறந்து ஐந்து நாட்களே ஆன பெண் சிசு இறந்த நிலையில் கிடந்-தது.
இதுகுறித்து நங்கவரம் வி.ஏ.ஓ., கீதா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார், இறந்த பெண் சிசு உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோத-னைக்கு அனுப்பி வைத்தனர்.