/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரஸ்தாளி வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை ரஸ்தாளி வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை
ADDED : ஜூலை 29, 2024 01:46 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகா-தானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் விளைநிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதில், பூவன் தார், 250 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.