போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்
போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்
போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்
ADDED : ஜூலை 29, 2024 01:38 AM
கரூர்: கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம், நேற்று நடந்தது. அதில், போலீ-சாருக்கு, பொதுமக்கள் எந்த வகையில் உதவுவது; போலீசார், பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் முறை, பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முறை, போதை பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாகாமல் தடுப்பது குறித்து விவாதிக்கப்-பட்டது.
கூட்டத்தில், மாநகராட்சி மேயர் கவிதை, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி, போலீஸ் எஸ்.ஐ., நாகராஜ் மற்றும் கரூர் நகரப்பகுதியை சேர்ந்த தொழில் அதிபர்கள், வியாபாரிகள் கலந்துகொண்டனர்.