/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வயலுார் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் பராமரிப்பு வயலுார் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் பராமரிப்பு
வயலுார் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் பராமரிப்பு
வயலுார் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் பராமரிப்பு
வயலுார் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் பராமரிப்பு
ADDED : ஜூன் 14, 2024 01:37 AM
கிருஷ்ணராயபுரம், வயலுார் பஞ்சாயத்து பகுதியில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பு பணி, நுாறு நாள் திட்ட தொழிலாளர் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்.,க்குட்பட்ட மழைநீர் சேமிக்கும் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை காலங்களில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. இதன் கரை அருகே மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அந்த மரக்கன்றுகளை சுற்றி களைச்செடிகள் வளர்ந்துள்ளதால், மரக்கன்றுகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பஞ்., நிர்வாகம் சார்பில் நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, மரக்கன்றுகளை சுற்றி வளர்ந்த களைகள் முழுதும் அகற்றும் பணி தீவிரமாக நடந்தது.