/உள்ளூர் செய்திகள்/கரூர்/ லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை ஜோர் லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை ஜோர்
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை ஜோர்
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை ஜோர்
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை ஜோர்
ADDED : ஜூன் 14, 2024 01:38 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதியில் விவசாயிகள் பரவலாக விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
வாழைத்தார்கள் அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. வரத்து சரிவால், கடந்த இரண்டு வாரங்களாக வாழைத்தார் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் பூவன் தார் ஒன்று, 400 ரூபாய், ரஸ்தாளி, 450 ரூபாய், கற்பூரவள்ளி, 300 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றதால், விற்பனை ஜோராக நடந்தது.