/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம் மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
ADDED : ஜூலை 29, 2024 01:48 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில், மீன்கள் வளர்க்கப்படுகிறது. தற்போது காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்கு டெல்டாவிற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீரில் கிடைக்கும் மீன்களை பிடித்து, அப்பகுதி மக்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதில் ஜிலேபி மீன் கிலோ, 130 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், இறால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
மீன்களை வாங்க கரூர், சேங்கல், புலியூர், திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், மீன்களை வாங்கி சென்றனர். நேற்று, 300 கிலோ மீன் விற்பனை செய்யப்பட்டது.