Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலை வளைவில் பள்ளம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

சாலை வளைவில் பள்ளம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

சாலை வளைவில் பள்ளம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

சாலை வளைவில் பள்ளம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

ADDED : மே 22, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம், மே 22-

காஞ்சிபுரம் மாநகராட்சி, டெம்பிள் சிட்டியில் இருந்து, தும்பவனம் பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் வளைவு ஒன்று உள்ளது.

வளைவு பகுதியை ஒட்டி பள்ளம் உள்ளது. இரவு நேரத்தில், போதுமான வெளிச்சம் இல்லாத இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை வளைவில் திரும்பும்போது, நிலைதடுமாறி பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், பள்ளம் உள்ள பகுதியில் சாலையோர தடுப்பு அமைக்கவும், இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us