Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ போலீஸ் நிலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்: டி.ஜி.பி.,

போலீஸ் நிலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்: டி.ஜி.பி.,

போலீஸ் நிலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்: டி.ஜி.பி.,

போலீஸ் நிலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்: டி.ஜி.பி.,

ADDED : ஜூன் 13, 2025 02:01 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நடைபெறும் போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் குடியிருப்புகளுக்கான கட்டுமான பணி விபரங்களை டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவ் பார்வையிட்டு விரைந்து முடிக்க அறீவுறுத்தினார்.

கடந்த ஆண்டு 50 கோடி ரூபாய் செலவில் போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் குடியிருப்புகள் முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்கப்பட்டுள்ளது என, தமிழக காவலர் வீட்டுவசதி வாரிய டி.ஜி.பி., சைலேஸ் குமார் யாதவ், நேற்று காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.

தமிழக காவலர் வீட்டு வசதி வாரியம் வாயிலாக, காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் 6.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையமும், சின்ன காஞ்சிபுரத்தில் 1.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையம் கட்டுமானப்பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவ், இரு இடங்களிலும் நடந்து வரும் கட்டுமானப்பணியை நேற்று பார்வையிட்டார். ஒப்பந்ததாரரிடம் கட்டுமானப் பணி விபரத்தை கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனை வழங்கி, பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவ் செய்தியாளிடம் கூறியதாவ:து

சில மாதங்களுக்கு முன், சென்னை ஆயிரம் விளக்கு மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதியில் 1,116 காவலர் குடியிருப்புகள் கட்ட தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த ஆண்டு 50 கோடி ரூபாய் செலவில் போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் குடியிருப்புகள் முன்னுரிமை அடிப்படையில் சீர் செய்யப்பட்டது.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் 54 சதவீதத்திற்கு மேல் காவல்துறையினருக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் தமிழக அரசின் இலக்காக 75 சதவீத போலீஸ் குடியிருப்பு அமைக்க பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகம், டி.எஸ்.பி., சங்கர் கணேஷ், காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி, உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us