Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் செயலற்று போன நெடுஞ்சாலை துறை கால்வாய்கள்

காஞ்சியில் செயலற்று போன நெடுஞ்சாலை துறை கால்வாய்கள்

காஞ்சியில் செயலற்று போன நெடுஞ்சாலை துறை கால்வாய்கள்

காஞ்சியில் செயலற்று போன நெடுஞ்சாலை துறை கால்வாய்கள்

ADDED : செப் 21, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் முக்கிய சாலைகளில் உள்ள நெடுஞ்சாலை துறையின் கால்வாய்கள் செயலற்று போனதால், மழைநீர் வடியாமல், தேங்கி நிற்கின்றன.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில், டி.கே.நம்பி தெரு, காந்தி சாலை, நெல்லுக்கார தெரு, காமராஜர் சாலை, மேற்கு ராஜ வீதி, கீரை மண்டபம் உள்ளிட்ட பல சாலைகள் நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகின்றன.

இந்த சாலைகளில் மழைநீர் தேங்கக் கூடாது என்பதற்காக, சாலையின் இருபுறமும், நெடுஞ்சாலை துறை சார்பில், மழைநீர் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த கால்வாய்களில், மழைநீர் வடிவதை காட்டிலும், முறைகேடாக பலரும், கழிவுநீர் இணைப்பை ஏற்படுத்தியதையடுத்து, கழிவுநீர் சென்றுக் கொண்டிருக்கிறது.

இதனால், மழைநீர் வடிய இடமில்லாமல், மீண்டும் சாலையிலேயே தேங்குகிறது. மழைநீர் வடிகால்வாய் கட்டியதற்கான நோக்கமே இங்கு நிறைவேறாமல் போவதாக நகரவாசிகளும், வாகன ஓட்டிகளும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை, கழிவுகள் நிறைந்து மழைநீர் கால்வாய் நாசமாகியுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய்கள், கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது.

காஞ்சிபுரத்தில் முக்கிய சாலைகளின் இருபுறமும் கட்டப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் செயலற்று உள்ளது. எனவே கால்வாய்களை சுத்தம் செய்து, மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகளை நெடுஞ்சாலை துறையினர் எடுக்க வேண்டும் என, நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us