Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ADDED : ஜூன் 27, 2025 11:08 PM


Google News
காஞ்சிபுரம்:முழு நேர கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கு, விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 2025- - 26ம் நிதி ஆண்டின் முழு நேர கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்கலாம். பத்தாம் வகுப்பு மற்றும் மூன்று ஆண்டு பட்டியப் படித்தவர்கள் ஜூலை- 1ம் தேதி அன்று 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஜூன் -20ம் தேதி, மாலை, 5:00 மணி வரையில், www.tncu.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஜூலை- 20ம் தேதி மாலை, 5:00 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணைய தளத்தில் அல்லாத விண்ணப்பங்களை முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இந்த பயிற்சி தமிழில் கற்றுக் கொடுக்கப்படும். 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வான பயிற்சியாளர் பயிற்சி கட்டணமாக, 20,750 ரூபாய், 'பில் டெஸ்க் பேமென்ட் கேட்வே' மூலம் செலுத்த வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு, அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையம், எண்5ஏ வந்தவாசி சாலை, காஞ்சிபுரம் என்கிற முகவரி 044- 27237699 தொலைபேசியில் தொடர்புக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us