Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

ADDED : ஜூன் 06, 2024 11:33 PM


Google News
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 46. இவர், சோழவரம் பகுதியில் உள்ள தனியார் கல் குவாரியில் பாறைகளை தகர்க்க வெடி வைக்கும் குழிகளுக்கு துளை போடும் பணி மேற்கொண்டு வந்தார்.

வீட்டில் உள்ள நேரத்தில் பகுதி நேர வேலையாக ஆர்பாக்கத்தில் உள்ள தனியாரது வாட்டர் சர்வீஸ் கடையில் லாரிகளுக்கு சர்வீஸ் பணி மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி, நேற்று காலை வாட்டர் சர்வீஸ் பணி மேற்கொள்ளும் போது மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்ததில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழழந்தார். தகவல் அறிந்த மாகரல் போலீசார் அவரது சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us