Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ எடமச்சி மலைக்குன்றில் எல்லையம்மன் கோவில் பணி

எடமச்சி மலைக்குன்றில் எல்லையம்மன் கோவில் பணி

எடமச்சி மலைக்குன்றில் எல்லையம்மன் கோவில் பணி

எடமச்சி மலைக்குன்றில் எல்லையம்மன் கோவில் பணி

ADDED : ஜூன் 03, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில், கிராம தேவதையாக எல்லையம்மனை அப்பகுதியினர் வழிபடுகின்றனர். கிராமத்தில் சிறிய வடிவிலாக இருந்த எல்லையம்மன் கோவிலை புதிய வடிவில் புனரமைக்க அப்பகுதியினர் தீர்மானித்தனர்.

அதன்படி, எடமச்சி மலை அருகே உள்ள அம்புலி குன்றின் மீது மண்டபத்துடன்கூடிய கோபுர வடிவிலான கோவில் கட்டுமான பணி, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

தற்போது 90 சதவீதம் பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, இக்கோவிலுக்கு மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us