Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாக்கடை நீர் ஓடும் சாலைகள் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

சாக்கடை நீர் ஓடும் சாலைகள் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

சாக்கடை நீர் ஓடும் சாலைகள் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

சாக்கடை நீர் ஓடும் சாலைகள் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

ADDED : ஜூன் 03, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் வடக்கு மற்றும் மேற்கு மாட வீதி இணையும் இடத்தில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 10 நாட்களாக 'மேன்ஹோல்' வழியாக வெளியேறி சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், காமாட்சியம்மன் கோவில், ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

காமாட்சியம்மன் கோவில் வடக்கு மாட வீதியில் இருந்து செங்கழுநீரோடை வீதி வரை, சிறு ஓடைபோல சென்ற கழிவுநீரால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.

காஞ்சிபுரம் பி.எஸ்.கே., தெரு மும்முனை சந்திப்பில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரத்திற்கும் மேலாக சாலையில் வழிந்தோடிய கழிவுநீர் சேக்குபேட்டை நடுத்தெரு, பாண்டுரங்க சுவாமி கோவில், சாலியர் தெரு வரை சென்றதால், பேருந்து நிலையம், காந்தி சாலை, காமராஜர் சாலை, ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதிக்கு சென்ற பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் தாத்திமேடு பகுதியில், நான்கு நாட்களாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகின்றன.

காஞ்சிபுரம் எஸ்.வி.என்., பிள்ளை தெரு, தபசு விநாயகர் கோவில் எதிரில், பாதாள சாக்கடையில் இருந்து சாலையில் கழிவுநீர் வழிந்தோடியதால், பிள்ளையார்பாளையம், ஏகாம்பரநாதர், கைலாசநாதர், கச்சபேஸ்வரர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

எனவே, காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us