Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மொபைல்போன் கடையில் திருட்டு

மொபைல்போன் கடையில் திருட்டு

மொபைல்போன் கடையில் திருட்டு

மொபைல்போன் கடையில் திருட்டு

ADDED : ஜூன் 08, 2024 11:26 PM


Google News
உத்திரமேரூர்: உத்திரமேரூர் சின்னநாரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 27. இவர், உத்திரமேரூர் தெற்கு ரெட்டி தெருவில் மொபைல்போன் கடை வைத்து உள்ளார்.

நேற்று முன்தினம், இரவு 9:30 மணிக்கு வழக்கம்போல கடையை பூட்டிக்கொண்டு மணிகண்டன் வீட்டுக்குச் சென்றார்.

நேற்று, காலை 7:00 மணிக்குதிரும்பு கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டார்.

உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் வைத்திருந்த 64,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, கடை உரிமையாளர் மணிகண்டன் அளித்த புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us