Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தாலுகாக்களில் குறைதீர் கூட்டம் 121 மனுக்கள் மீது உடனடி தீர்வு

தாலுகாக்களில் குறைதீர் கூட்டம் 121 மனுக்கள் மீது உடனடி தீர்வு

தாலுகாக்களில் குறைதீர் கூட்டம் 121 மனுக்கள் மீது உடனடி தீர்வு

தாலுகாக்களில் குறைதீர் கூட்டம் 121 மனுக்கள் மீது உடனடி தீர்வு

ADDED : ஜூன் 08, 2024 11:25 PM


Google News
காஞ்சிபுரம்: உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத் துறை சார்பில், மாதந்தோறும்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும் பொதுவினியோக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, ஜூன் மாதத்திற்கான பொதுவினியோக குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.

இதில், காஞ்சிபுரம் தாலுகாவில் வளத்தோட்டம், உத்திரமேரூரில் பெருங்கோழி, வாலாஜாபாத்தில்நாயக்கன்குப்பம், ஸ்ரீபெரும்புதுாரில் சந்த வேலுார், குன்றத்துாரில் மணிசேத்துப்பட்டு கிராமம் என, ஐந்து தாலுகாவிலும் பொதுவினியோக குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.

இதில், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் உள்ளிட்ட 133 மனுக்கள் வரப்பெற்றன. இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 121 மனுக்களுக்கு குறைதீர் கூட்டத்தில் உடனடி தீர்வு காணப்பட்டது.

மீதமுள்ள 12 மனுக்கள் மீது உரிய ஆய்வுமேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என,காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us