/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் கலை கல்லுாரியில் வரும் 15ல் கலந்தாய்வு துவக்கம் உத்திரமேரூர் கலை கல்லுாரியில் வரும் 15ல் கலந்தாய்வு துவக்கம்
உத்திரமேரூர் கலை கல்லுாரியில் வரும் 15ல் கலந்தாய்வு துவக்கம்
உத்திரமேரூர் கலை கல்லுாரியில் வரும் 15ல் கலந்தாய்வு துவக்கம்
உத்திரமேரூர் கலை கல்லுாரியில் வரும் 15ல் கலந்தாய்வு துவக்கம்
ADDED : ஜூலை 09, 2024 10:32 PM
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024 - 25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 15ம் தேதி துவங்குகிறது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் முனைவர் சுகுமாரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024- - 25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, வரும், 15, 16ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த கலந்தாய்வில், இக்கல்லுாரி விண்ணப்பித்த மாணவ- - மாணவியர் அனைவரும் பங்கேற்கலாம். வரும் 15ம் தேதி அன்று, அறிவியல் பாடப்பிரிவுகளாக பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், வரும் 16ம் தேதி, பி.காம்., பி.ஏ., பொருளியல், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மேலும் விபரங்களுக்கு www.gascuthiramerur.ac.in என்ற கல்லுாரியின் இணையதளத்தை பார்வையிடலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.