/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சேதமடைந்த மின்கம்பம் மாற்ற வலியுறுத்தல் சேதமடைந்த மின்கம்பம் மாற்ற வலியுறுத்தல்
சேதமடைந்த மின்கம்பம் மாற்ற வலியுறுத்தல்
சேதமடைந்த மின்கம்பம் மாற்ற வலியுறுத்தல்
சேதமடைந்த மின்கம்பம் மாற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூன் 20, 2024 11:00 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெரு, சந்து பகுதியில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பஞ்சுப்பேட்டை துணை மின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ஒரு கம்பத்தின் மையப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும், அருகில் உள்ள மரக்கிளைகள் மின் ஒயரில் உரசியபடி உள்ளது.
பலத்த காற்றுடன் மழை பெய்தால், உடைந்து சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் முற்றிலும் சாய்ந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பஞ்சுப்பேட்டை சந்து தெருவில், உடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.