/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஒழையூரில் கால்நடை குடிநீர் தொட்டி வீண் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு ஒழையூரில் கால்நடை குடிநீர் தொட்டி வீண் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஒழையூரில் கால்நடை குடிநீர் தொட்டி வீண் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஒழையூரில் கால்நடை குடிநீர் தொட்டி வீண் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஒழையூரில் கால்நடை குடிநீர் தொட்டி வீண் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:11 AM

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், ஒழையூர் ஊராட்சியில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், 2018 - 19ல், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 20,000 ரூபாய் செலவில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
தொட்டி அருகில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தும், கால்நடை தொட்டியில் தண்ணீர் நிரப்ப குழாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், மேய்ச்சலுக்கு சென்று வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தாகம் தீர்க்க முடியாத நிலையில் குடிநீர் தொட்டி வீணாகி வருகிறது.
எனவே, கால்நடை தொட்டிக்கு குடிநீர் குழாய் ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒழையூர் ஊராட்சியைச் சேர்ந்த கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.