Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஏரிக்கால்வாயில் தரைபாலம் அமைக்க கிளக்காடி விவசாயிகள் கோரிக்கை

ஏரிக்கால்வாயில் தரைபாலம் அமைக்க கிளக்காடி விவசாயிகள் கோரிக்கை

ஏரிக்கால்வாயில் தரைபாலம் அமைக்க கிளக்காடி விவசாயிகள் கோரிக்கை

ஏரிக்கால்வாயில் தரைபாலம் அமைக்க கிளக்காடி விவசாயிகள் கோரிக்கை

ADDED : ஜூலை 05, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கிளக்காடி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சித்தேரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரி நிரம்பி கலங்கல் வழியாக வெளியேறக்கூடிய உபரி நீர் குமாரவாடி, புக்கத்துறை உள்ளிட்ட ஏரிகளுக்கு கால்வாய் மூலம் செல்கிறது.

மழைக்காலத்தில் இந்த கால்வாய் வழியாக தண்ணீர் புரண்டோடும் சமயங்களில், கால்வாயை கடந்து தங்களது நிலங்களுக்கு செல்வதில் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு டிராக்டர், மாட்டுவண்டி, டிரில்லர் இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம் போன்றவற்றை நிலப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

கிளக்காடி சித்தேரி உபரி நீர் கால்வாய் இணைப்பாக தரைபாலம் அமைக்க வேண்டும் என, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடத்தில் மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

இதனால், பல்வேறு வகையில் பாதித்து வருகிறோம். எனவே, இக்கால்வாயில் தரைபாலம் அமைத்து விவசாயம் சார்ந்த பணிகளுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us