/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஒய்.எம்.சி.ஏ.,வில் நாளை 'பக்' கோப்பை போட்டிகள் ஒய்.எம்.சி.ஏ.,வில் நாளை 'பக்' கோப்பை போட்டிகள்
ஒய்.எம்.சி.ஏ.,வில் நாளை 'பக்' கோப்பை போட்டிகள்
ஒய்.எம்.சி.ஏ.,வில் நாளை 'பக்' கோப்பை போட்டிகள்
ஒய்.எம்.சி.ஏ.,வில் நாளை 'பக்' கோப்பை போட்டிகள்
ADDED : ஜூலை 21, 2024 07:21 AM
சென்னை : சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரிசார்பில், அதன் நிறுவனர்ஹாரி குரோபக்கை நினைவு கூரும் வகையில், ஆண்டு தோறும், 'பக்' கோப்பைக்கான விளையாட்டுதிருவிழா நடைபெறும்.
அந்த வகையில் 67வதுஆண்டிற்கான விளை யாட்டு போட்டிகள்,நந்தனத்தில் உள்ள ஒய்.எம் சி.ஏ., கல்லுாரி வளாகத்தில் நாளை துவங்குகின்றன.
இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 5,000த்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.
தடகளம், வில்வித்தை, பூப்பந்து, இறகுபந்து, கூடைபந்து, வாலிபால், குத்துச்சண்டை, கிரிக்கெட், ஹேண்ட்பால், ஹாக்கி, கபடி, கோ - கோ, டென்னிஸ், எறிபந்து உள்ளிட்ட 18 வகையான போட்டிகள் இருபாலருக்கும் நடக்கவுள்ளன.
நாளை காலை 9:00 மணிக்கு துவங்கும் போட்டிகளை, சென்னைமண்டல கல்லுாரியின் கல்வி இணை இயக்குனர் சுடர்கொடி துவக்கி வைக்கிறார்.
போட்டிகள் தொடர்ந்து, 26ம் தேதி வரை நடக்கின்றன.