/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மார்க்கெட் கமிட்டியில் ரூ. 10 கோடி வர்த்தகம் மார்க்கெட் கமிட்டியில் ரூ. 10 கோடி வர்த்தகம்
மார்க்கெட் கமிட்டியில் ரூ. 10 கோடி வர்த்தகம்
மார்க்கெட் கமிட்டியில் ரூ. 10 கோடி வர்த்தகம்
மார்க்கெட் கமிட்டியில் ரூ. 10 கோடி வர்த்தகம்
ADDED : மே 31, 2025 12:27 AM
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில், ஐந்து நாட்களில் ரூ.10 கோடி வர்த்தம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்கள் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
தற்போது எள், நெல் உள்ளிட்ட விளைபொருட்களின் வரத்து சீராக இருந்து வரும் நிலையில், கடந்த ஐந்து நாட்களில், 1890.52 மெட்ரிக் டன் விளை பொருட்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் ரூ. 9.85 கோடி வர்த்தகமானது.
எள் விலை மூட்டை ஒன்றின் சராசரி விலை 9 ஆயிரம் ரூபாயாக இருந்தது. வரத்து சராசரியாக தினசரி 1200 மூட்டை என்ற அளவில் இருந்ததால் வர்த்தகம் உயர்ந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது மழை காரணமாக, எள் விலை சற்று சரிவை கண்டது.