Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

ADDED : மே 14, 2025 11:45 PM


Google News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வரஞ்சரம் அடுத்த கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ் மகள் காவியா, 19; ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், இவரது தாய் கஸ்துாரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் தாயை காண, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து புறப்பட்ட காவியா கடந்த, 9ம் தேதி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திற்கு வந்துவிட்டதாக, தாய்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி, கஸ்துாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us