Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

ADDED : மார் 22, 2025 08:29 PM


Google News
சங்கராபுரம் : மாயமான கல்லுரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த முரார்பாளையம் கிரமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் மேகலா,18; இவர் கடலுர் மாவட்டம் ஆவட்டியில் உள்ள கல்லுரியில் பி.எஸ்சி.,(அக்ரி) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் கல்லுாரியில் இருந்து வீட்டிற்கு வந்த மேகலா தொடர்ந்து மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அதனை, அவரது தாய் அஞ்சலை கண்டித்துவிட்டு, துாங்கச் சென்றார்.

துாங்கி எழுந்து வந்து பார்த்தபோது மேகலாவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அஞ்சலை கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து, மேகலாவை தேடிவருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us