ADDED : மார் 22, 2025 08:34 PM
சங்கராபுரம் : குட்கா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோரந்து சென்றனர். அப்போது, அடுத்த முரார்பாளையம் கிராமத்தில் இரு கடைகளில் சோதனை நடத்தினர்.
அதில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இரண்டரை கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கடை உரிமையாளர்களான தமிழ்செல்வன்,45; செல்வராஜ்,55; ஆகியோரை கைது செய்தனர்.