ADDED : மார் 23, 2025 09:42 PM
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் அடுத்த புக்கிரவாரியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் மனைவி சங்கீதா, 29; கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர். செல்வக்குமார் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 13ம் தேதி ஏற்பட்ட தகராறில், சங்கீதாவை, செல்வகுமார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து செல்வக்குமாரை கைது செய்தனர்.