ADDED : மார் 23, 2025 09:41 PM
சங்கராபுரம் சங்கராபுரம் அருகே மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்ற தென்கீரனுார் ராஜா, 40; என்பவரை கைது செய்து 20 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.