ADDED : செப் 21, 2025 11:08 PM
கள்ளக்குறிச்சி,: வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பொரசக்குறிச்சியை சேர்ந்த மோகன் மனைவி சித்ரா, 45; என்பவர், தனது பெட்டி கடையில் குட்கா பொருட்களை விற்றது தெரிந்தது. இதையடுத்து சித்ராவை கைது செய்து, கடையில் இருந்த குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.