Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மரசிற்ப பயிற்சி துவக்கம்

மரசிற்ப பயிற்சி துவக்கம்

மரசிற்ப பயிற்சி துவக்கம்

மரசிற்ப பயிற்சி துவக்கம்

ADDED : செப் 21, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மத்திய அரசின் 'குரு சிஷ்யா பரம்பரா' இரண்டு மாத மரசிற்ப பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் விருக் ஷா கைவினை தொழில் கூட்டமைப்பு கட்டடத்தில் மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் நிதி உதவியுடன் சென்னை பூம்புகார் தமிழ்நாடு கைத்தறி தொழில் வளர்ச்சி கழகம் மூலமாக 'குரு சிஷ்யா பரம்பரா' இரண்டு மாத மரசிற்ப பயிற்சி முகாம் துவங்கியது.

புதுச்சேரி கைவினை அபிவிருத்திய ஆணைய உதவி இயக்குநர் ரூப்சந்தர் தலைமை தாங்கி, பயிற்சியாளர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.

சேலம் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் நரேந்திர போஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய மேலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி விருக் ஷா கைவினை தொழில் கூட்டமைப்பு மர சிற்ப பயிற்சியாளர் சக்திவேல் வரவேற்றார்.

பயிற்சி காலத்தில் ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு தலா 300 ரூபாய் உதவித்தொகை மற்றும் 2000 ரூபாய் மதிப்பிலான 'டூல் கிட்' வழங்கப்படுகிறது. பயிற்சியில 18 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 30 பேர் சேர்ந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us