ADDED : ஜூன் 02, 2025 12:18 AM
பயன்பாடியின்றி குடிநீர் தொட்டி
திருநாவலுார் பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாடியின்றி 5 மாதங்களுக்கும் மேலாக காட்சி பொருளாக உள்ளது.
-வெங்கடேசன், திருநாவலுார்
நெடுஞ்சாலையோரம் குப்பை
கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
-அருண், கள்ளக்குறிச்சி
நிழற்குடை அமைக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேந்திரன், காரனுார்
மின்விளக்கின்றி மக்கள் அச்சம்
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கூத்தக்குடி சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவில் அவ்வழியாக செல்பவர்கள் அச்சமடைகின்றனர்
-ஹரிஹரன், நீலமங்கலம்
குப்பைக்கு தீ: சுகாதார சீர்கேடு
எலவனாசூர்கோட்டை பைபாஸ் சாலையோரம் உள்ள ஏரியில் குப்பைகள் கொட்டி தீ வைத்து எரிப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-கதிரேசன், எலவனாசூர்கோட்டை